கும்ப ராசி அம்மா தனது குழந்தைகளுக்கு வழக்கமான கருத்துகளை மட்டுமே கற்பிப்பதில் ஆர்வம் காட்டமாட்டார். அவர்களை வழக்கத்திற்கு வெளியே சிந்திக்கச் செய்கிறார். குழந்தைகளில் மனிதநேய உணர்வையும் சமூக, தொண்டு பணிகளின் மீதான ஈடுபாட்டையும் வளர்க்கிறார். ஆனால் சில சமயம் குழந்தைகள் அதிக சுதந்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அது சிக்கலாக மாறக்கூடும். அப்போது குழந்தைகளின் உணர்ச்சி தேவைகளை கையாள முடியாமல் அவர் பாதுகாப்பின்மையை உணரலாம். அதிகமாக செல்லம் கொடுக்காமல், தனித்துவமான அன்பும் அக்கறையும் காட்ட வேண்டும்.
கடவுள் ஒவ்வொரு முறையும்
கீழே வர முடியாததால் அம்மாக்களை
உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. ஆகவே
இந்த உலகில் அம்மாவை விட சிறந்தவர் இல்லை.

